dark_mode
Image
  • Sunday, 23 November 2025

செப்டம்பர் 15 முதல் காலை சிற்றுண்டி திட்டம்

செப்டம்பர் 15 முதல் காலை சிற்றுண்டி திட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி தமிழக அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
செப்டம்பர் 15 முதல் காலை சிற்றுண்டி திட்டம்

related_post