
கமல் ஆவேசம்:- விரட்டி அடிக்கப்பட வேண்டும் இந்த அரசு
சூழியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று யானை ஒன்றின் மரணம் குறித்து மநீம தலைவர் கமல் ஆவேசம் பொங்கத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
யானைகள் மரணம் அதிகரித்திருப்பது பற்றி மநீம தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறது. நவக்கரையில் மீண்டும் ஒரு யானை ரயிலில் அடிபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சூழியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்