வெடிக்கும் உட்கட்சி பூசல்… செல்வப்பெருந்தகையை மாற்ற கோரி டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸார்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்றக் கோரி, மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க முயற்சி, கே.சி.வேணுகோபாலை சந்திக்க முடிவு.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத் தலைவர்களுக்கு மதிப்பளிப்பதில்லை எனவும், கட்சிக்காக உழைக்கும் மாவட்டத் தலைவர்களுக்குப் பதிலாக புதிய மாவட்டத் தலைவர்களைத் தேர்வு செய்யப்படுவதாகவும் செல்வப்பெருந்தகை மீது அக்கட்சி நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
BY.PTS NEWS M.KARTHIK
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description