தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் தகிக்கும் நிலையில், 10 மாவட்டங்கள் வரை 100 டிகிரி பாரன்கீட் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதே சமயம் சில இடங்களில் கோடை மழையும் பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. ஈரோடு, கரூர் பரமத்தி, தஞ்சாவூர், மதுரை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 25ஆம் தேதி முதல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 25ஆம் தேதி முதல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். அதிக ஈரப்பதமும் அதிக வெப்பநிலையும் இருக்கும் சூழலில் ஒருசில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description