dark_mode
Image
  • Monday, 21 April 2025

சளிக்கு நிரந்தர தீர்வு தரும் கற்பூரவல்லித் தேநீர் செய்யும் முறை..!

சளிக்கு நிரந்தர தீர்வு தரும் கற்பூரவல்லித் தேநீர் செய்யும் முறை..!

தொண்டைக்கு இதமாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த கற்பூரவல்லித் தேநீர். இந்த தேநீரை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

கற்பூரவல்லி இலைகள் - கைப்பிடி

துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
டீத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு அல்லது தேன் - தேவைக்கு

செய்முறை:

கற்பூரவல்லி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கற்பூரவல்லி இலைகள், துருவிய இஞ்சி, டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதித்ததும் வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகவும்.

சூப்பரான கற்பூரவல்லித் தேநீர் ரெடி.

சளிக்கு நிரந்தர தீர்வு தரும் கற்பூரவல்லித் தேநீர் செய்யும் முறை..!

comment / reply_from

related_post