dark_mode
Image
  • Thursday, 26 February 2026

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

கருணைத் தொகை என்ற பெயரை உதவித் தொகை என எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 24) மாற்றினார்.

 

கருணைத் தொகையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 என்ற அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் பெயர் மாற்றம் செய்துள்ளார்.

 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

’’மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது.

 

இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் உரிமைத் தொகை என்ற சொல் உதவித் தொகை என மாற்றப்பட்டுள்ளது.

related_post