
மரணத்தோடு போராடிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார்... மயிலாப்பூரில் இறுதி அஞ்சலி!
இயற்கை', ' பேராண்மை', ' ஈ', 'பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை' என தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை 10 மணியளவில் மரணமடைந்தார். 61 வயதான ஜனநாதன் மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென மயக்கமாகி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால் சுயநினைவின்றி சிகிச்சை பெற்றுவந்த ஜனநாதன் மரணத்தோடு போராடி உயரிழந்திருக்கிறார்.சினிமாவுலகில் நேர்மையாளராக அறியப்பட்டவர் ஜனநாதன்.