dark_mode
Image
  • Sunday, 08 February 2026

தவெக அலுவலகத்துக்கு யாரும் வர வேண்டாம்.. பொதுச்செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு!

தவெக அலுவலகத்துக்கு யாரும் வர வேண்டாம்.. பொதுச்செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தவெக தொண்டர்கள் யாரும் விருப்பமனு பெற கட்சித் தலைமை அலுவலகத்துக்கு யாரும் வர வேண்டாம் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், சட்டமன்றத் தேர்தல் போட்டியிட விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என அக்கட்சி அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்கவும், தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. விருப்ப மனுக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, பனையூர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் தலையிட்டும் நிலைமை சீராகாததால், பொதுமக்கள் தவெக அலுவலகம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவெக சார்பில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், இன்று முதல் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தல்

ஆனால், தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகக் கழகத் தோழர்கள் யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று புஸ்ஸி ஆன்ந்த் வலியுறுத்தி உள்ளார்.

எனவே, விருப்ப மனு பெற விரும்பும் தொண்டர்கள், பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அலுவலகம் முன் வாக்குவாதம்

முன்னதாக இன்று பனையூர் தவெக அலுவலகத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விருப்ப மனு பெற வந்ததால் அங்கு பெரும் மக்கள் கூட்டம் கூடியது. இதனால், தவெக சார்பில் வந்திருந்த பவுன்சர்கள், பல்வேறு இடங்களில் பேரிகாடுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாகனங்களை கூட தவெக நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

இதனால் அந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் அங்கு வந்து பொதுமக்களுக்கு வழிவிட வேண்டும் என தவெக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினர். ஆனால் எந்த பயனும் இல்லாததால், அப்பகுதி பொதுமக்கள் தவெக அலுவலகம் முன்பாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தவெக தொண்டர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

related_post