சென்னை குற்றச் சம்பவங்கள்.. திமுக அரசை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்!
சென்னையில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் தொடர் குற்றச்சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், 3 பேர் கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது
சென்னை நகரின் முக்கியமான, மக்கள் அதிகமாகச் செல்வதான பகுதியில் இந்த கொலைகள் நடந்துள்ளது மிகவும் கவலைக்குரிய விஷயம் என அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற மனநிலையையும் உருவாக்குவதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதையே இது காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.