மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா அண்ணாமலை?

தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தார். பின்னர் அவர் தமிழகத்தின் பாஜக தலைவரானார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி
தமிழகத்தில் பாஜக நன்றாக காலூன்ற அவர் மிகவும் பாடுபட்டார். இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். கூட்டணி கட்சி தலைவர்களோடு கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி உடைந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பல முனைப்போட்டி நிலவியது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தோல்வியை தழுவின.
ஆந்திராவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு
இவ்வாறு இருக்கும் நிலையில் பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை, ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக மத்தியதலைமை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அண்ணாமலையின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description