dark_mode
Image
  • Thursday, 06 March 2025

மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சரின் மகளுக்கு துன்புறுத்தல் – பாதுகாப்பு குறைவுக்கு ரக்சா கட்சே கண்டனம்!

மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சரின் மகளுக்கு துன்புறுத்தல் – பாதுகாப்பு குறைவுக்கு ரக்சா கட்சே கண்டனம்!

மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சரின் மகளுக்கு எதிரான துஷ்பிரயோகம் – பாதுகாப்பு குறைவில் கேள்வியெழுப்பும் ரக்சா கட்சே

 

மகாராஷ்டிராவில் மகாசிவராத்திரி விழாவுக்காக சென்ற மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு இணையமைச்சர் ரக்சா கட்சேவின் மகள் மற்றும் அவரது தோழிகள் சிலர் அடையாளம் தெரியாத கும்பலால் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து தனது பரிதாபத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்திய ரக்சா கட்சே, "நான் மகாசிவராத்திரிக்காக செல்லுமா என்று மகள் கேட்டபோது, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்ல சொல்லியிருந்தேன். இருப்பினும், ஒரு கும்பல் அவர்களை தொடர்ந்து துன்புறுத்தி, தள்ளிவிட்டதாக தகவல் கிடைத்தது. ஒன்றிய அமைச்சரின் மகளுக்கே பாதுகாப்பு இல்லையே! அப்படியென்றால் சாதாரண குடும்ப பெண்களின் நிலை என்ன?" என்று கருத்து தெரிவித்தார்.

 

மகாராஷ்டிரா பாஜக ஆட்சி செய்யும் மாநிலமாக இருப்பதால், மாநில அரசு பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் வட்டாரங்களில் இதற்கும் மகளிர் பாதுகாப்பு குறித்த ஆளும் மத்திய மற்றும் மாநில அரசின் பொறுப்புகளுக்கும் இடையே விவாதம் வெடித்துள்ளது.

 

comment / reply_from

related_post