dark_mode
Image
  • Thursday, 17 July 2025

கடலூரில் கல்லூரி கழிவறையில் மாணவி தற்கொலை

கடலூரில் கல்லூரி கழிவறையில் மாணவி தற்கொலை

கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ளது கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி.பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வரும் நிலையில், இதில் இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடைபெறுகின்றன. காலையில் நடைபெறும் வகுப்புகள் அரசு உதவி பெறும் கல்லூரி யாகவும் மாலை வகுப்புகள் சுயநிதி கல்லூரியாகவும் இயங்கி வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் சின்னப்ப சமுத்திரம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (19) என்ற மாணவி முதலாமாண்டு (B.com)பிகாம் இந்த கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரி அருகிலேயே உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரி துவங்கிய உடன் மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். அப்போது கழிவறைக்கு சென்ற சில மாணவிகள் அங்கு ஒரு மாணவி தூக்குப்போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவிகள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டனர். கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப் பட்ட நிலையில் காவல்துறையினர் மற்றும் கல்லூரி முதல்வர் சென்று கழிவறையில் மாணவியின் உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த மாணவி நேற்று மாலை கல்லூரி முடிந்த உடனேயே கழிவறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அந்த மாணவியின் புத்தகப் பையை ஆய்வு செய்தபோது அதில் ஒரு கடிதமும் இருந்தது.

அந்த கடிதத்தில் தனது அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளவும், சகோதர சகோதரிகளுக்கு நன்றாக படிக்க வேண்டும் என எழுதி இருந்த மாணவி தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூரில் கல்லூரி கழிவறையில் மாணவி தற்கொலை

related_post