dark_mode
Image
  • Thursday, 17 July 2025

பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,; அ.தி.மு.க.,வுக்கு அனுதாபப்படுகிறார் திருமா

பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,; அ.தி.மு.க.,வுக்கு அனுதாபப்படுகிறார் திருமா

வலுவாக இருக்கும் அ.தி.மு.க.,வை கூட்டணி ஆட்சி என பேசி பலவீனப்படுத்த பா.ஜ., முயற்சி செய்கிறது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நிருபர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கோட்பாடு முக்கியம். பா.ஜ.,வின் கொள்கை அவர்களுக்கு அதை தாண்டி நட்பு இருப்பது தவறு இல்லை. கே.பி.ராமலிங்கம் நன்கு அறிமுகமானவர். நன்கு பழக்கமானவர். தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த போது பார்லிமென்ட் மைய மண்டபத்தில் சந்தித்துள்ளோம்.

 

அந்த நட்பு அடிப்படையில் சந்திக்க வந்தால் வரவேற்போம். அதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், பா.ஜ., கொள்கை அம்பேத்கர் குறிக்கோள்களுக்கு நேர் முரணானது என்பதை நாங்கள் புரிந்து இருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.

 

தி.மு.க., உடன் உள்ளதால், நாங்கள் பா.ஜ.,வை எதிர்ப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அது அல்ல. தி.மு.க., கூட்டணி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி பா.ஜ., கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் தனியாக இருந்தாலும் எதிர்ப்போம்.

 

அதற்கு காரணம் பா.ஜ., மீது உள்ள தனிப்பட்ட அரசியல் காரணங்கள் அல்ல. தேர்தல் அரசியல் காரணங்கள் அல்ல. அம்பேத்கரின் சமத்துவ கொள்கைகளை ஏற்று கொண்ட சமத்துவ இயக்கமாக பா.ஜ., இல்லை. அம்பேத்கரின் மதசார்பின்மைக்கு நேர் எதிரான இயக்கம் பா.ஜ.,

 

அதனால் பாஜ.,வை விமர்சிக்கிறோம். தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் பா.ஜ.,வை எதிர்க்கிறோம் என்றால், தேர்தல் அரசியலில் கூட்டணி அடிப்படையில் அமைந்துவிடும். கருத்தியல் அடிப்படையில் மதசார்பின்மைக்கு பா.ஜ., எதிரானது என்பதால், விமர்சனம். வேறு எந்த தனிநபர் விமர்சனமோ, தனிப்பட்ட அரசியல் காரணங்களோ கிடையாது. இந்தியாவில் மதசார்பின்மைக்கு நேர் எதிரான இயக்கமாக பா.ஜ., உள்ளதால், நாங்கள் கருத்தியல் அடிப்படையில் எதிர்க்கிறோம்.

related_post