dark_mode
Image
  • Sunday, 24 August 2025
இனி ப்ளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.50

இனி ப்ளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.50

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய நேரத்தில் ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சில முக்கிய இடங்களில் உள்ள பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது.

இந்தநிலையில் கோடைகாலத்தில் ரயில் நிலையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தடுக்க மத்திய ரயில்வே பிளாட்பார கட்டணத்தை ரூ.50 ஆக அதிகரித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், தாதர் மற்றும் மும்பையில் உள்ள லோக்மண்ய திலக் டெர்மினஸ் மற்றும் தானே, கல்யாண், பன்வேல் மற்றும் பிவாண்டி சாலை நிலையங்களில் ரயில்வே பிளாட்பார கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் தெரிவித்தார்.

மேலும் இது தற்காலிக கட்டண உயர்வு 1-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு அமலில் இருக்கும்.

இந்தநிலையில் கோடைகாலத்தில் ரெயில் நிலையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தடுக்க மத்திய ரெயில்வே பிளாட்பார கட்டணத்தை ரூ.50 ஆக அதிகரித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது

இதன்படி மும்பை பெருநகர பகுதியில் உள்ள சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், தாதர், எல்.டி.டி. ஆகிய ரெயில் நிலையங்களிலும் மும்பை பெருநகரில் உள்ள தானே, கல்யாண், பன்வெல், பிவண்டி ரோடு ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறுகையில், "இது தற்காலிக கட்டண உயர்வு தான். 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ள பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு வரும் ஜூன் 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

related_post