dark_mode
Image
  • Monday, 08 December 2025
ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தத்தாத்ரேயா ஹொசபலே தேர்வு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தத்தாத்ரேயா ஹொசபலே தேர்வு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த தத்தாத்ரேயா ஹொசபலே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக நடந்த உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏபிபிஎஸ்) கூட்டத்தில், தத்தாத்ரேயா ஹொசபலேவைப் புதிய பொதுச்செயலாளராக நியமித்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக பொதுச் செயலாளராக இருந்து வந்த 73 வயது சுரேஷ் பையாஜி ஜோஷிக்கு பதிலாக இனி தத்தாத்ரேயா ஹொசபலே பொதுச் செயலாளராகச் செயல்படுவார்.

related_post