
ரயில் பாதை அமைக்கும் பணி!: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் போக்குவரத்தில் இன்றும், நாளையும் மாற்றம்...!
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் போக்குவரத்தில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதை அமைக்கும் பணியால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை இன்று 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை 45 நிமிடத்துக்கு ஒரு ரயில், செங்கல்பட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படவுள்ளது.