SIR : தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மதியம் வெளியீடு!
சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. மதியம் 2 மணி அளவில் தேர்தல் அலுவலர் வெளியிடுகிறார் .
தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) நேற்றுடன் நிறைவடைந்தன. இதன் தொடர்ச்சியாக, இன்று மதியம் 2 மணியளவில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். இந்த சிறப்பு திருத்தப் பணிகளின் போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடும் எதிர்ப்பு
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அங்கு நடைபெற்ற SIR பணிகளின் போது, சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் விடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால், தேர்தலுக்கு முன்னர் இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி SIR பணிகள் தொடங்கின.