2024 லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி

ராபர்ட் வத்ரா சமீபத்தில் தனது மனைவியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி குறித்து முக்கியமான கருத்துகளை தெரிவித்தார். பிரியங்கா காந்தி கண்டிப்பாக மக்களவையில் இருக்க வேண்டும். லோக்சபாவில் இருப்பதற்கு தேவையான தகுதிகள் அவருக்கு உள்ளது. காங்கிரஸ் இதை அங்கீகரிக்கும் என்றும், அவரிடமிருந்து கட்சி இன்னும் பலன்களைப் பெறும் என்று நான் நினைக்கிறேன், என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அதாவது அடுத்த பொதுத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அவர் உத்தரப்பிரதேசம், அல்லது கர்நாடகாவில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description