ரூ 15,183 கோடி சொத்துக்கள் மீட்பு.. நிதி அமைச்சர் பரபரப்பு தகவல்!

மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்ட X பதிவில் கூறியிருப்பதாவது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, தொடக்க மற்றும் சிறு தொழில்களை விரிவுபடுத்த விரும்பிய கோடிக்கணக்கான இந்தியர்களின் கடன் தேவைகளும் கனவுகளும் முடக்கப்பட்டன.
இதற்கு முக்கிய காரணம் வங்கிகளில் காணப்பட்ட நிதி நிர்வாக சீர்கேடுதான். மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு நெருக்கடி நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், பெரிய அளவிலான வங்கி மோசடிகளை விசாரிக்க ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. திவால் கோட் (IPC) உருவாக்கப்பட்டது.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய 2018ல் சட்டம் இயற்றப்பட்டது. ரூ.250 கோடிக்கு மேல் உள்ள கடன்களை திறம்பட கண்காணிப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு முகமைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன. 2014 முதல் 2023 வரை எந்த தொழிலதிபருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. நிதி மற்றும் பொருளாதாரத்தில் வல்லுநர்கள் என்று கூறிக் கொண்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்களால் ரைட் ஆப் மற்றும் தள்ளுபடிகள் என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
1,105 மோசடி வழக்குகளை அமலாக்க இயக்குனரகம் விசாரித்து ரூ.64,920 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 2023 நிலவரப்படி, மாநில வங்கிகள் ரூ.15,183 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளன. வாராக் கடன் பிரச்னை காங்கிரஸ் காலத்தில் விதைக்கப்பட்டது. அப்போது வங்கியின் தலைமை நிர்வாகிகள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். 2023-24ல் பொதுத்துறை வங்கிகள் நான்கு மடங்கு அதிகமாக அதாவது ரூ.1.41 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description