dark_mode
Image
  • Friday, 07 March 2025

முதலமைச்சரிடம் மாவட்ட காஜிகள் சந்திப்பு – ஹஜ் இல்லம் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தனர்

முதலமைச்சரிடம் மாவட்ட காஜிகள் சந்திப்பு – ஹஜ் இல்லம் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தனர்

 

சென்னை: நாகப்பட்டினத்தில் மார்ச் 3, 2025 அன்று நடைபெற்ற அரசு விழாவில், சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ரூ.65 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்காக, மாவட்ட காஜிகள் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

மாநிலம் முழுவதிலுமுள்ள ஹஜ் யாத்திரிக்குச் செல்லும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு இந்த புதிய ஹஜ் இல்லத்தை அமைக்கவுள்ளது. இதன் மூலம், பயணிகளுக்கு சிறந்த வசதிகள், தங்கும் இடங்கள், வழிகாட்டு மையங்கள் மற்றும் பயண ஏற்பாடுகள் ஒரே இடத்தில் கிடைக்கும்.

 

முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த மாவட்ட காஜிகள்:

 

ஜனாப். சலாவூதின் முகம்மது அயூப்

 

ஜனாப். எம். சையது மசூது

 

ஜனாப். முகம்மது அப்துல் காதர்

 

ஜனாப். பசூலுல் ஹக்

 

ஜனாப். அப்துல் காதிர்

 

ஜனாப். கே. அப்துல் கரீம்

 

ஜனாப். கே.எம். முகம்மது அஸ்ரப் அலி

 

ஜனாப். அக்பர் அலி

 

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் ஹஜ் பயணிகளுக்கான புதிய ஏற்பாடுகள், அரசு வழங்கும் வசதிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

செய்தியாளர். மு. கார்த்

திக், புதிய தலைமைச் செய்தி

 

comment / reply_from

related_post