நெல்லையில் ஆணவ கொலை.. கைதான சுர்ஜித்தின் தந்தையும் கைது..!

நெல்லை மாவட்டத்தில் நடந்த ஆணவக் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த கொலை வழக்கில் கைதான சுஜித்தின் தந்தையும் கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
நெல்லையை சேர்ந்த சுஜித் என்பவர், தனது சகோதரியை கவின் காதலித்ததால், கவினை ஓட ஓட அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஆணவ கொலையாக கருதப்படுகிறது. இந்த கொடூரமான வழக்கில் ஏற்கனவே சுஜித் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிறப்பு காவல் படை எஸ்.ஐ. சரவணன் தற்போது சுஜித்தின் தந்தையை கைது செய்துள்ளார்.
கவினின் பெற்றோர்கள், சுஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் உடலை பெறுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தை தொடர்ந்தே தற்போது சுஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சரவணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, அவரை ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கவின் கொலையில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு கைதுகள் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்ந்து உற்று நோக்கப்பட்டு வருகின்றன.