திருப்பத்தூர் மாணவர் மரணம்: பள்ளிக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம்... பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னதம்பி. இவரது மகன் முகிலன் என்பவர் திருப்பத்தூர் ஆசிரியர் நகர்ப் பகுதியில் உள்ள தோமினிக் சாவியோ என்ற மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலை வகுப்பறையில் இல்லாததால் ஆசிரியர்கள் தொலைப்பேசி வாயிலாகப் பெற்றோருக்கு தொடர்புக் கொண்டு தங்களுடைய பிள்ளை வீட்டிற்கு வந்தாரா? எனக் கேட்டு உள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முகிலனின் பெற்றோர் என்னுடைய மகன் உங்கள் பள்ளி விடுதியில் தங்கித் தான் படித்து வருகிறார். அப்படி இருக்கையில் எப்படி வீட்டிற்கு வருவார் என்று கேள்வி எழுப்பினர்.