dark_mode
Image
  • Sunday, 08 June 2025

தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தை பாராட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தை பாராட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை பாராட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

 

டெல்லி சென்றுள்ள ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து மாநில விவகாரங்களை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதி மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டார்.

 

இந்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டு வரும் நிலையில், சந்திரபாபு நாயுடு தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பாராட்டி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். தமிழக கல்வி முறை, மாணவர்கள் வெளிநாடுகளில் சாதிப்பது, அவர்கள் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் உயர்ந்த பதவிகளை பெறுவதற்கான காரணங்களை அவர் விளக்கினார்.

 

சந்திரபாபு நாயுடு கூறியதாவது: "தமிழ்நாட்டில் இருந்து பலரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்றுத் தங்களை திறம்பட உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அவர்கள் சர்வதேச நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஒரு தமிழர். அமெரிக்காவின் பல்வேறு உயர்ந்த பதவிகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்திய நிர்வாக சேவையில் (IAS) பயிற்சி பெறுவதற்காக டெல்லி வருபவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான். பொதுவாக IAS, IPS என்றால் அது தமிழ்நாட்டில் இருந்தே அதிகமாக வருகிறார்கள். இன்று அவர்கள் உலகம் முழுவதும் பயணித்து வெற்றியை எட்டியுள்ளனர்.”

 

அவர் மேலும் கூறியதாவது: "ஆந்திரப் பிரதேசத்தில் பல்கலைக்கழகங்களில் மூன்று மொழிகளை மட்டும் அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறோம். இது கல்வி வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். தமிழ்நாடு, கல்வியில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் மூலம் அங்குள்ள மாணவர்கள் சர்வதேச நிலை வரை சென்றிருக்கிறார்கள். தமிழர்களின் திறமை, கல்வி மற்றும் உழைப்பின் பலனை அவர்கள் தற்போது பெற்றுவருகிறார்கள். இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும்.”

 

தமிழ்நாடு கல்வியில் முன்னணி மாநிலமாக இருப்பது தமிழக அரசின் நீண்ட கால முயற்சிகளாலும், கல்வி மீது மக்களுக்குள்ள மிகுந்த ஆர்வத்தாலும் என்று அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் கல்வியை முதன்மைப்படுத்தியதன் விளைவாக, அங்குள்ள மாணவர்கள் வெற்றிகரமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர்ந்த பதவிகளை எளிதாக அடைகிறார்கள்.

 

இந்த கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஆந்திர முதல்வரின் பாராட்டு, சமூக வட்டாரங்களில், அரசியல் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல அறிமுகமாக பார்க்கப்படுகிறது.

 

தற்போது, இந்தியாவில் கல்வி கொள்கை குறித்த விவாதங்கள் சூடுபிடித்து வரும் நிலையில், சந்திரபாபு நாயுடுவின் இந்தக் கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ்நாட்டின் கல்வி முறை, அரசு உதவிகள், மாணவர்களின் திறமை ஆகியவை இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகின்றன.

 

அவரது இந்தக் கருத்துகள், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரிதாக பேசப்படுகின்றன. தமிழ்நாட்டில் கல்வியை ஊக்குவிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதால், இன்று தமிழக மாணவர்கள் உலகம் முழுவதும் வெற்றி பெறுகிறார்கள்.

 

இதன் மூலம், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சந்திரபாபு நாயுடு, தமிழக மாணவர்களின் சாதனைகளை வெளிப்படையாகபாராட்டியுள்ளார்.

 

related_post