சென்னை வொண்டர்லா இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு!
சென்னை வொண்டர்லா இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது. நேற்று முதல்வர் திறந்து வைத்த நிலையில் இன்று முதல் திறக்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.
சென்னை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த Wonderla தீம் பார்க், டிசம்பர் 1, 2025 அன்று பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது.
புதிய அத்தியாயம்
இது சென்னையின் பொழுதுபோக்கு உலகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது. 64 ஏக்கர் பரப்பளவில், OMR அருகே அமைந்துள்ள இந்த புதிய Wonderla, அதிரடி ரைடுகள், மெதுவான ரம்மியமான சவாரிகள் மற்றும் தமிழ்நாட்டின் தனித்துவமான அம்சங்களுடன் மக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.