dark_mode
Image
  • Sunday, 23 November 2025

சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்!

சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்!
2022-23-ம் கல்வியாண்டுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 18,72,339 மாணவர்கள் எழுதினர். தமிழ், இந்தி, உள்பட 13 மொழிகளில் நடைபெற்ற நீட் தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் 1.42 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி உள்ளனர். தமிழ் மொழியில் 31,803 பேர் உள்பட தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் நீட் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு தமிழ் மொழியில் 60 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர். சென்னையில் மட்டும் 20 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர்.
சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்!

related_post