dark_mode
Image
  • Saturday, 19 April 2025

காசி தமிழ் சங்கமம் கங்கா- யமுனா சங்கம் போன்று புனிதமானது: பிரதமர் நரேந்திர மோடி

காசி தமிழ் சங்கமம் கங்கா- யமுனா சங்கம் போன்று புனிதமானது: பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (நவ.19) வாரணாசியில் ஒரு மாத கால காசி தமிழ் சங்கம நிகழ்வை தொடங்கிவைத்தார்.

அந்த விழாவில் காசி-தமிழ் சங்கமம் கங்கா-யமுனா சங்கத்தைப் போலவே புனிதமானது என்று கூறினார்.

மேலும், காசி-தாமிழ் சங்கமம் நிகழ்வு வடக்கு மற்றும் தெற்கே உள்ள 'பல நூற்றாண்டுகள் அறிவின் பிணைப்பு' என்றும் பண்டைய நாகரிக தொடர்பை மீண்டும் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காசி மற்றும் தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்களாக திகழ்கின்றன.
இரு பிராந்தியங்களும் உலகின் மிகப் பழமையான மொழிகள் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றின் மையங்களாகும்' என்றார்.

மேலும், 'காசியில் பாபா விஸ்வநாதர் இருந்தால், தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இறைவனின் ஆசீர்வாதம் உள்ளது. காசி மற்றும் தமிழ்நாடு இரண்டும் 'சிவ்மாய்' (சிவனின் பக்தியில் நனைந்தவர்கள்) மற்றும் 'ஷக்டிமே' (சக்தியின் தெய்வத்தின் பக்தியில் நனைந்தவர்கள்), 'என்றார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்வு உத்தரப் பிரதேச மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நடத்துகிறது. இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் இசை அறிமுகப்படுத்தப்படும்.

இந்நிகழ்வில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காசி-தமிழ் சங்கமம் நமது பாரம்பரிய பண்டைய கலாசாரத்தை பிரதிபலிக்கும்' என்றார்.
இந்நிகழ்வில் இசைஞானி இளையராஜா, தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காசி தமிழ் சங்கமம் கங்கா- யமுனா சங்கம் போன்று புனிதமானது: பிரதமர் நரேந்திர மோடி

comment / reply_from

related_post