dark_mode
Image
  • Saturday, 02 August 2025

ஓணம் பண்டிகை-சிறப்பு ரயில்கள் மற்றும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளால் மக்கள் மகிழ்ச்சி!

ஓணம் பண்டிகை-சிறப்பு ரயில்கள் மற்றும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளால் மக்கள் மகிழ்ச்சி!

தெற்கு ரயில்வே, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக சென்னை சென்ட்ரலுக்கும் கொல்லத்துக்கும் இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை-கொல்லம்

சேலம் ரயில்வே பிரிவு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரயில் எண் 06119 சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17, செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இந்த ரயில் அடுத்த நாள் காலை 6.40 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

 

கொல்லம் - சென்னை சென்ட்ரல்

ரயில் எண் 06120 கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் காலை 10.40 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

கோவை வழியாக இயக்கம்

இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி மற்றும் சாஸ்தாங்கோட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்கள் மூலம் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகள் பயனடைவார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்வது நல்லது.

related_post