dark_mode
Image
  • Monday, 08 December 2025

ஐபிஎல்:- தோனி சென்னைக்கு வருகை

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி சென்னைக்கு வந்துள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் மட்டும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் மார்ச் 9 முதல் தொடங்கவுள்ளது. இதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி சென்னைக்கு வந்துள்ளார். இதன் விடியோவை சிஎஸ்கே நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

related_post