dark_mode
Image
  • Saturday, 09 August 2025

இன்று மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழு – தடையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இன்று மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழு – தடையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இன்றைய பொதுக்குழுவுக்கு தடையில்லை: வாருங்கள் சொந்தங்களே.... பா.ம.க. வளர்ச்சி குறித்து விவாதித்து முடிவெடுப்போம்!"

 

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அழைப்பு

 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.

 

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் இன்று காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே!

 

செய்தியாளர் மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post