அன்புமணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் - பாமக எதை நோக்கி செல்கிறது?

பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பாமக செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்!
உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். அதில், அவர் தலைவராக ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடியாக ராமதாஸ் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.