🎈 💧 🩸 ஜூலை 20 🩸 💧 🎈 † 📖 நற்செய்தி வாசகம் 📖 †

🎈 💧 🩸 ஜூலை 20 🩸 💧 🎈
† 📖 நற்செய்தி வாசகம் 📖 †
🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦
🙏 "தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே'' என்றார் இயேசு" 🙏
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12 : 46-50 ✠
🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️
🌹 அக்காலத்தில்
மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என்றார்.
அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு........👏

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description