வாக்காளர் அடையாள ஆவணம் கட்டாயம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழக தேர்தல் 2026: வாக்காளர் அடையாள ஆவணம் கட்டாயம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாடுவில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முக்கியமான தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படும் 5 மாநில தேர்தல்களில், தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிமுறைகளின் படி, வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) பெற்றவர்கள், அதை வாக்குச்சாவடியில் காட்ட வேண்டும்.
அதே நேரத்தில், வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கீழ்க்கண்ட மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது:
-
ஆதார் அட்டை
-
100 நாள் வேலைத் திட்ட பணியாளர் அட்டை
-
அஞ்சல் வங்கி கணக்கு புத்தகம்
-
அரசு அங்கீகரித்த மருத்துவ காப்பீடு அட்டை
-
ஓட்டுநர் உரிமம்
-
பாஸ்போர்ட்
-
ஓய்வூதிய ஆவணம்
-
அரசு ஊழியர்களின் பணி அடையாள அட்டை
மேலும், வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் வரிசை எண்ணை எளிதாக அறிய “வாக்காளர் தகவல் சீட்டு” (Booth Slip) வழங்கப்படும். இதில் வாக்குச்சாவடி பெயர், வாக்குப்பதிவு தேதி, நேரம் போன்ற விவரங்கள் இடம்பெறும்.
இந்த வாக்காளர் தகவல் சீட்டுகள், வாக்குப்பதிவு நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களால் வீடு தோறும் விநியோகிக்கப்படும். ஆனால், இந்த சீட்டு அடையாள ஆவணமாக ஏற்கப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தல் செயல்முறை வெளிப்படையாகவும், சீராகவும் நடைபெற வாக்காளர்கள் அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.