டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு: பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்ட நிலையில், சற்றுமுன் தேர்தல் ஆணையம் டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
அத்துடன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, டெல்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கை செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, டெல்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கை செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஜனவரி 17ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்வது ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும் என்றும் ஜனவரி 20ஆம் தேதி வேட்பாளர்கள் திரும்ப பெற கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேதிகள் டெல்லி சட்டப்பேரவை மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description