dark_mode
Image
  • Monday, 21 April 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை

இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் அவரின் உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், 'முஸ்அப் இப்னு உமைர்(ரலி) கொல்லப்பட்டபோது.. அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார். அவருக்குக் கஃபனிடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா(ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்டபோது.. அவரும் என்னைவிடச் சிறந்தவரே... அவருக்குக் கஃபனிடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே, நல்லவை(க்கான நற்கூலி)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன் கூட்டியே கொடுக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்!' எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
ஸஹீஹ் புகாரி : 1274.
அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை

comment / reply_from