dark_mode
Image
  • Tuesday, 03 March 2026

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 13-05-2024 திங்கட்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 13-05-2024 திங்கட்கிழமை

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரமளான் மாதத்தில் தொடர்நோன்பு நோற்றார்கள். மக்களும் அவ்வாறே தொடர்நோன்பு நோற்றனர். ஆனால், மக்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள். "நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு (என் இறைவனிடமிருந்து) உணவும் பானமும் வழங்கப்படுகிறது" என்றார்கள்.

 

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

 

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ரமளான் மாதத்தில்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

 

ஸஹீஹ் முஸ்லிம் : 2011. 

 

அத்தியாயம் : 13. நோன்பு

 
📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 13-05-2024 திங்கட்கிழமை