📚தினம் ஓர் ஹதீஸ்📚03-09-2023-ஞாயிற்றுக்கிழமை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர்.
என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5196.
அத்தியாயம் : 67. திருமணம்

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description