dark_mode
Image
  • Monday, 21 April 2025

மதிமுகவில் இன்னும் பிரச்னை முடியலை : வல்லம் பஷீர் சொன்ன காரணம்!

மதிமுகவில் இன்னும் பிரச்னை முடியலை : வல்லம் பஷீர் சொன்ன காரணம்!

மதிமுகவின் முதன்மைச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ இருந்து வருகிறார். கட்சிக்குள் துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையில் இருந்த பிரச்னை சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது. மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோ ஆதரவு நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், இறுதி வரை வைகோவின் சேனாதிபதியாகவே இருப்பேன் என்று தெரிவித்தார்.

 மோதலின் உச்சகட்டமாக தனது முதன்மைச் செயலாளர் பதவியை துரை வைகோ ராஜினாமா செய்தார். மல்லை சத்யாவை நீக்க வைகோ மறுத்துவிட்டதால் இந்த ராஜினாமா முடிவு எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோவும், மல்லை சத்யாவும் மேடையில் அமர்ந்திருந்தாலும் பார்த்துக்கொள்ளவில்லை.
மதிமுகவில் இன்னும் பிரச்னை முடியலை : வல்லம் பஷீர் சொன்ன காரணம்!

comment / reply_from

related_post