பொள்ளாச்சி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் (39) என்பவர் கடந்த 12.02.2025 அன்று இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி To பாலக்காடு சாலை அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று அவரை தாக்கி அவரிடமிருந்த *இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்-1* ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்கள். மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழிப்பறி வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப.,* அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று (14.02.2025) கோவை உடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷேர்பகதூர் மகன் *வினோத் (25)*, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் மகன் *ஸ்டாலின் (27)*, பிரகாஷ் மகன் *யோகேஷ் (27)* மற்றும் 21 வயது பெண் ஒருவர் ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் மேற்படி நபர்களை கைது செய்து மேற்படி வழக்கின் சொத்தான *இருசக்கர வாகனம்-1 மற்றும் செல்போன்-1* ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description