"ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்... நிர்மலா சீதாராமனை...." காயத்ரி ரகுராம் கருத்து..!!

மணிப்பூர் விவகாரம் குறித்து திமுக எம்பி கனிமொழி பேசியதற்கு பதில் அளித்த, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையை உருவிய கட்சி திமுக என்றும் அவர்கள் திரெளபதி குறித்து பேசுவதை நம்ப முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த சம்பவத்திற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்திருப்பார் என கூறியுள்ளார்.
ஜெயலலிதா 1989ஆம் ஆண்டு சட்டபேரவையில் நடந்த சம்பவத்தை மணிப்பூர் பிரச்சினையுடன் ஒப்பிடமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பிட்டுப் பேசுவதற்கு ஜெயலலிதா பலவீனமான தலைவர் அல்ல என்றும் பா.ஜ.கவின் தவறான நிர்வாகத்திற்கு எதிராக குரல் கொடுத்திருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்குநேரி சம்பவம் மற்றும் மணிப்பூர் கலவரம் குறித்து பதிவிட்ட ஒரு நெட்டிசனுக்கும் காட்டமாக பதில் அளித்தார் காயத்ரி ரகுராம். அதில் மணிப்பூர் பிரச்சினையை முட்டாள்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மணிப்பூரில் மக்கள் எரிக்கப்பட்டபோதும், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டபோதும், பாஜக அரசு வாய்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்றும் சாடியுள்ளார்.
சாதிக் கலவரங்கள் அல்லது மதக் கலவரங்களின் வலையில் தமிழகம் ஒருபோதும் சிக்காது என்று குறிப்பிட்டுள்ள காயத்ரி ரகுராம், தமிழக அரசு ஒருபோதும் வாய்மூடி வேடிக்கை பார்க்காது என்றும் உடனடி நடவடிக்கை எடுத்து சிக்கலை தீர்த்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றும் தெரவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் சாதிக் கருத்து சண்டைகள் நடக்கலாம், ஆனால் தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது காயத்ரி ரகுராம் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description