dark_mode
Image
  • Thursday, 17 April 2025

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக சிவி ஆனந்த் போஸை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.!!

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக சிவி ஆனந்த் போஸை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.!!

மம்தாவுடனான தொடர் மோதலைத் தொடர்ந்து ஜெகதீப் தங்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததால், தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசன் (மணிப்பூர் கவர்னர்) கூடுதல் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், புதிய ஆளுநராக ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் கவர்னர் இல. கணேசன், ஜூலை முதல் மேற்கு வங்கத்தின் கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார்.

சிவி ஆனந்த் போஸ் ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப்பைப் பெற்றவர். முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன், சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பதவியையும் வகித்துள்ளார். ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளராக விளங்கும், போஸ் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் உட்பட ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 40 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக சிவி ஆனந்த் போஸை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.!!

comment / reply_from

related_post