dark_mode
Image
  • Friday, 07 March 2025

மேட்டூர் கோவிலில் சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது

மேட்டூர் கோவிலில் சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது

 

இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மேட்டூர் கவிதை மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரன் உடனாகிய மாதேஸ்வரிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் மிக சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர்.

 

சிறப்பு அபிஷேகத்திற்காக புனித நதி நீர், பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்திற்குப் பிறகு, மாதேஸ்வரன் மற்றும் மாதேஸ்வரிக்கு மலர்கள், ஆபரணங்கள் மற்றும் பட்டு உடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

 

இதனை தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் ஆழ்ந்த பக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக, அன்னதானம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆன்மிக சாந்தி பெற்றனர்.

 

இந்த சனி பிரதோஷம் நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

 

மேட்டூர் கோவிலில் சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது
மேட்டூர் கோவிலில் சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது

comment / reply_from

related_post